வாழ்க்கையில் சந்தோசத்தை எப்படி பெறுவது?
வாழ்க்கையில் நாம் எப்படி தான் போராடி கொண்டிருந்தாலும் இறுதியில் நமது நோக்கம் ஒன்றே அது சந்தோசம் ஒன்று தான், அந்த சந்தோசத்தை எப்படி பெறுவது என்று இன்றைய திங்கட்கிழமை தத்துவத்தில் இருந்து பார்க்கலாம் வாங்க:
ரமணமஹரிஷி இடம் ஒரு மனிதர், நீங்கள் காட்டில் தான் தியானம் செய்கிறீர்கள், ஆனால் உங்களை சுற்றி சிறுத்தை, சிங்கம், புலி என இவ்வளவு விலங்குகள் உங்களது. அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் தினமும் எப்படி சந்தோசமாக இருக்குறீர்கள்? அதுவும் நூறுஆண்டுகளாக எப்படி வாழுகிறீர்கள் வாழ்கிறீர்கள் என்று கேள்வியை கேட்டார்.
அதற்கு அந்த மஹான் மனித வாழ்வில் மூன்று விஷயத்தை எப்பொழுதும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும், அந்த மூன்று விஷயத்தை கடைபிடித்தால் அவன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகிறான்.
அந்த மூன்று விஷயங்கள்.
1. உங்களது உடலின் மீது கவனம்:
இன்றைய காலகட்டங்களில் நன்றாக உழைத்து பின்னர் அவரது உடலிற்காக மருந்துகள் வாங்கி அவர்களின் உழைத்த பணத்தை செலவழிக்குறார்கள். இதனை மாற்ற உங்களின் உடலை மிக சீராக பாற்றுக்கொள்ளுங்கள்.
2. கடமை:
உங்களை பெற்ற தாய் தந்தைகளிடம் மரியாதையுடனும், அவர்களுக்கான கடமையை சரியாக செய்யுங்கள், மேலும் உங்களை வளர்க்கும் இந்த சமுதாயத்திற்கு உங்களால் முடிந்தவற்றை அவ்வப்பொழுது செய்துகொண்டு இருங்கள்.
3. கடவுளை வணங்குதல்:
நாம் ஓடி கொண்டிருக்கிறோம் என்றால் நம்பலை மேல் இருக்கும் ஒருவன் ஓட்டிக்கொண்டிருக்கிறான் என்ற ஒரு சக்தியை நம்புங்கள் அந்த சக்தியை தினமும் மனதார தினத்தின் மூலம் வணங்கி நன்றி சொல்லுங்கள்.
இந்த மூன்று விஷயத்தையும் தவறாமல் செய்தால் உங்கள் வாழ்க்கை என்றும் வசந்தகாலமாக இருக்கும் என்று இந்த வசந்தமிழ் கூறும் ஒரு கூற்றாகும்.
சந்தோசவாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்.
இனிய நாள்.