Attitude is Everything in Tamil
Attitude is Everything
பொதுவாவே நம்ப ஆள் பாக்க எப்படி இருந்தாலும், நம்மளோட குணத்தை வெச்சுதான் எல்லாத்தையும் முடிவு பண்றாங்க!
✔ஒரு தீவுல ஆயிரம் பேரு சிறை கைதிகளா இருந்தாங்க, அதுல ஒருத்தன் மட்டும் எப்பவும் சந்தோசமா சிரிச்சிட்டாய் இருந்தானாம், அத பாத்துட்டு அங்க இருக்குற காவலாளி, நான் உன்ன கைது பண்ணி அடச்சீ வெச்சிருக்கோம், ஆனா நீ இங்க சிரிச்சிட்டே சந்தோசமா இருக்கேனு கேட்ட அப்ப, அந்த கைதி அதுக்கு பொதுவா சிறைகைதிங்க இங்க வந்தாலே செத்துடுவாங்க, ஆனா நான் இங்க உயிரோடதான இருக்கேன், அது போதாதா சந்தோச படுத்த, அப்டினு சொன்னதும் அந்த பதிலை பாத்து ஆச்சிரியம் அடைந்த காவலாளி அவனை விடுதலை பன்னிட்டாங்க!
✔அதே மாறி ஒரு புற்றுநோயாளிக்கு, குழாய் வழியேதான் உணவு வருது இருந்தாலும் எப்படி சந்தோசமா இருக்கீங்கன்னு கேட்ட அப்ப, பரவால்லை இந்த ஒரு வழிச்சு இருக்கே அப்டினு சொன்னாரு...
✔இந்த பதில்லாம் அவுங்கள திருப்தி அடைய வைக்கல அவுங்கள சந்தோச படவெச்சது, இது அவுங்க எண்ணங்கள் எப்படி பட்டதுனு முடிவு பண்ணுது,
✔நம் எண்ணங்கள் தான் நம்ப குணத்தை முடிவு பண்ணுமாம், அதுக்கு என பண்ணனும்னு பாப்போம்
✔தினமும் ஒரு பத்து நல்ல வார்த்தைகளை பேசுங்க, யாருகிட்ட பேசணும்னு கேக்காதீங்க, உங்ககிட்டயே பேசுங்க, நல்ல வார்த்தைகள் தான் உங்கள நல்வழி படுத்தும், அந்த வழிதான் உங்க வாழ்க்கையின் ஒளி,
இந்த புத்தகத்தோட எழுத்தாளர் ஒரு விஷயம் சொல்லிருக்காரு, புதுசா ஒரு ஜன்னல் வாங்கிருக்கீங்க, அது வழியா வெளில இருக்குற உலகத்தை பாத்தா அழகா தெரியும், அதுவே ஒரு ஆறு மாசம் கழிச்சி அந்த ஜன்னல் வழியா வெளில பாத்த அலங்கோலமா தெரியும், இதுல மாத்த வேண்டியது உலகத்தை இல்லை, உங்க ஜன்னலை தான், இதுல ஜன்னல்னு நான் சொல்றது உங்க மனச தான் மனசு சுத்தமா இருந்த எல்லாமே அழகா இருக்கும் அழகா மாறும்…
இனிமேல் இந்த உலகத்தை அழகா மாத்துவோம்…
Click here to read this book 👇